ட்ரெண்டிங்

கொச்சுவேலி- மட்கான் இடையே பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

கேரளாவின் கொச்சுவேலி மற்றும் கோவாவின் மட்கான் இடையே டிசம்பர் 07- ஆம் தேதி பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வரும் டிசம்பர் 07- ஆம் தேதி கேரளா மாநிலத்தின் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், டிசம்பர் 08- ஆம் தேதி கோவா மாநிலத்தின் மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில், வரும் டிசம்பர் 10- ஆம் தேதி மட்கானில் இருந்து புறப்படும் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், டிசம்பர் 12- ஆம் தேதி கொச்சுவேளியை வந்தடையும். இந்த ரயில், தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர், காட்பாடி, சேலம் வழியாக இயக்கப்படும்.

 

இந்த சுற்றுலா ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது".இவ்வாறு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.