ட்ரெண்டிங்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் பணிகளின் கவனத்திற்கு! 

ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குட்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஏப்ரல் 02- ஆம் தேதி மட்டும் சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22649) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படாது. 

மறுமார்க்கத்தில், ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22650), ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட மாட்டாது. இந்த ரயில்கள் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.