சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (கனிமங்கள்) பனீந்திர ரெட்டி இ.ஆ.ப., தலைமையில் இன்று (ஜூலை 27) காலை 10.00 மணிக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, சேலம் மாவட்டத்தில் கனிமவளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., கனிமவளத்துறையின் இயக்குநர் நிர்மல் ராஜ் இ.ஆ.ப., மற்றும் கனிமவளத்துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.