ட்ரெண்டிங்

சுவரொட்டி ஓட்டுவதில் மோதல்; 2 பேர் கைது! 

சேலம் மாவட்டம், சின்ன கொல்லப்பட்டியில் உள்ள காளியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 22). இந்த நிலையில், கன்னங்குறிச்சி கோயில் திருவிழாவிற்காக ராதிகாவின் 17 வயதான இளைய சகோதரர், அங்குள்ள தனியார் சுவரில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். 

இதுகுறித்து சுவரின் உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞரை இரண்டு பேர் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், சேலம் சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 33), விக்னேஷ் (வயது 31) ஆகிய இருவரை கைது செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். 

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.