ட்ரெண்டிங்

கோவை- ப்ரௌனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 

 

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக கோவை- ப்ரௌனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வரும் நவம்பர் 14, 21 ஆகிய நாட்களில் கோவையில் இருந்து ப்ரௌனிக்கும், நவம்பர் 16, 23 ஆகிய நாட்களில் ப்ரௌனியில் இருந்து கோவை போத்தனூருக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.