ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல சேலம் ரயில், பேருந்து நிலையங்களுக்கு படையெ

 

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் சேலம் ஜங்சன் ரயில் நிலையம் மற்றும் சேலம் மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.

 

பயணிகளின் வசதிக்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கூடுதல் சிறப்பு ரயில் சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்றுக் கொண்டிருப்பதால் சேலம் மாநகரில் உள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.