ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு சிறப்பு ரயில்!

 

தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு நாளை (நவ.10) சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குண்டூர், விஜயவாடா, விஜயநகரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

நாளை (நவ.10) மதியம் 01.45 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நாளை மறுநாள் (நவ.11) இரவு 09.15 மணிக்கு சாம்பல்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.