ட்ரெண்டிங்

களைகட்டும் தீபாவளி விற்பனை- கடைவீதியில் அலைமோதும் கூட்டம்!

 

தித்திக்கும் தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

 

முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றன. சேலம் மாநகரில் உள்ள வணிக நகரங்களான கடைவீதி, இரண்டாவது அக்ரஹாரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, ஐந்து ஈரோடு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

 

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி என்பதாலும், மக்கள் ஏராளமானோர் கடைவீதிகளில் குவிந்தனர். மக்கள் புத்தாடைகளையும், அணிகலங்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தல தீபாவளிக் கொண்டாடும் தம்பதிக்கு கொடுக்க, குடும்பத்தினர் சீர்வரிசைப் பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

 

சாலையோரக் கடைகளிலும், மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுவதால், குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உயர் கோபுரங்களை அமைத்தும், சிசிடிவி கேமராக்களை கொண்டு காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.