ட்ரெண்டிங்

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பழனிபண்டாரம் தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் சதீஷ் (வயது 20). நேற்று (ஜன.04) இரவு 08.00 மணியளவில் இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவரும், இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு பகுதியில் வந்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த மணல் சறுக்கி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருசக்கர வாகனத்தையொட்டி வந்த விக்கிக்கு தலையில் பலத்த அடிபட்டது. மேலும் பின்னால் அமர்ந்து வந்த சதீஷுக்கும் தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த விக்கி இன்று (ஜன.05) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி இறந்தார். சதீஷ் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.