ட்ரெண்டிங்

சம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு!

 

சேலம் வழியாக இயக்கப்படும், சம்பல்பூர் (Sambalpur)- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நவம்பரம் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 08311) வரும் நவம்பர் 11- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமை அன்று இரவு 10.55 மணிக்கு புறப்படும் ரயில், வியாழன்கிழமை இரவு 07.50 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில், ஈரோடு- சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 08312) வரும் டிசம்பர் 01- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மதியம் 01.45 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், சனிக்கிழமை அன்று இரவு 09.15 மணிக்கு சாம்பல்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த ரயில்கள் சேலம் வழியாக இயக்கப்படும் என்றும், சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 3 நிமிடங்கள் நின்று செல்லும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.