ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

 

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை (அக்.26) மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும், மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்பு பணிகள் அக்.26- ஆம் தேதியன்று நடைபெறுவதால், மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படாது.

 

அதன்படி, மாநகராட்சிப் பகுதியில் நாளை (அக்.26) வியாழன்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.