ஆன்மிகம்

ஆயுதபூஜையையொட்டி, சேலம் மார்க்கெட்டுகளில் பழங்கள், காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்ற பொத

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள புதுப்பேட்டையில் ஆயுதபூஜையையொட்டி, அமைக்கப்பட்ட காய்கறி மற்றும் பூக்கள் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

 

காட்டுக்கோட்டை, மஞ்சினி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வாழைப் பழங்கள், மாலை, வெள்ளை பூசணிக்காய், தேங்காய் உள்ளிட்டப் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக, சந்தையில் கூட்டம் அலைமோதியது.

 

அதேபோல், சேலம் மாநகரத்தில் உள்ள சின்னக்கடை வீதியில் உள்ள கடைகள் மற்றும் அம்மாப்பேட்டை காந்தி மைதானம், தாதகாப்பட்டி கேட் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் பழங்கள், பூக்கள், பொரி மூட்டைகளை வாங்க பொதுமக்கள் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது. அத்துடன், வியாபாரமும் ஜோராக நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.