ட்ரெண்டிங்

சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் சேவை நேரம் மாற்றம்!

 

தினசரி இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் (ரயில் எண் 20643), சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் மாலை 05.58 மணிக்கு வரும் வந்தே பாரத் ரயில், இனி மாலை 05.48 மணிக்கே வரும். அதேபோல், ஈரோடு ரயில் நிலையத்திற்கு மாலை 06.47 மணிக்கு வரும் ரயில், இனி 06.37 மணிக்கும், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 07.25 மணிக்கு வரும் ரயில், இனி இரவு 07.18 மணிக்கும் வரும். சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பாகே ரயில் வருகை தரும். இந்த நேரம் மாற்றம் வரும் அக்டோபர் 23- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.