ட்ரெண்டிங்

அக்.29- ஆம் தேதி நடைபெறும் மாரத்தானில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு!

 

வரும் அக்டோபர் 29- ஆம் தேதி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும், போதைப்பொருட்களுக்கு எதிராகவும் மிகப்பெரிய அளவிலான மாரத்தான் சேலத்தில் நடைபெறவுள்ளது. 

 

வரும் அக்டோபர் 29- ஆம் தேதி அன்று காலை 06.00 மணிக்கு சேலம் மாவட்டம், அழகாபுரம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள ஏ பி மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு எதிரில் இருந்து 5 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி தொடங்குகிறது. 

 

இதில் பங்கேற்க விரும்புவோர் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf7SMZkhIATkWxqe_pJxa1uSlSx3I8SF5DQ-5Lmx7AubCQdAg/viewform 

என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று

ரூபாய் 199 கட்டணத்தைச் செலுத்திப் பதிவுச் செய்துக் கொள்ளலாம். முதலிடம் பிடிப்பவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும், இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயமும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். 

 

இதற்கான ஏற்பாடுகளை ஏ பி மெடிக்கல் சென்டர், பிஎன்ஐ சேலம், மீடியா பார்ட்னர் ஜஸ்ட் நவ் சேலம் செய்துள்ளது.