ட்ரெண்டிங்

"சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை"- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு!

"சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை"- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு! 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 24) டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது, "தமிழக முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான முகாமை நாளை (ஜூலை 24) தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உளளார். 

இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகைப் புரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும், தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகை தந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார். 

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 24) காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.