ட்ரெண்டிங்

பிரபல ரவுடி கட்டையால் அடித்துக் கொலை!

 

சேலம் மாவட்டம், கோரிமேடு அருகே உள்ள ஜல்லிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளனர். 

 

இந்த நிலையில், பழைய கார் ஒன்றை வாங்கிய மணிகண்டன் வாடகைக்கு ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற 28 வயது இளைஞர், மணிகண்டனிடம் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, மேட்டூர் சென்று விட்டு வீடு திரும்பினார். பின்னர், காரை மணிகண்டனிடம் ஒப்படைத்தார். 

அப்போது, மணிகண்டன் மற்றும் மகாவிஷ்ணு ஆகியோருக்கு வாடகை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டனை மகாவிஷ்ணு கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

 

படுகாயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், மகாவிஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்