ட்ரெண்டிங்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சார்பில் மேயரிடம் காசோலையை வழங்கிய மாமன்ற உறுப்பின

சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்தின் 8-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி கார்டன் மற்றும் சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரனிடம் மாமன்ற உறுப்பினர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் வழங்கினர்.

 

அதேபோல், கொண்டலாம்பட்டி மண்டலத்தின் 51, 60 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட தார்சாலை, சாக்கடை மற்றும் பூங்கா சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 4.70 லட்சத்திற்கான காசோலையை மேயர் ராமச்சந்திரனிடம் பொதுமக்கள், மண்டலக் குழுத்தலைவர் அசோகன் வழங்கினர்.

 

அம்மாப்பேட்டை மண்டலத்தின் 9, 37 ஆகிய வார்டுகளில் கான்கீரிட் சாலை, சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக 9 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பொதுமக்கள் சார்பாக மேயர் இராமச்சந்திரனிடம் மாமன்ற உறுப்பினர்கள் தெய்வலிங்கம், திருஞானம் ஆகியோர் வழங்கினர்.