ட்ரெண்டிங்

பராமரிப்புப் பணி காரணமாக, சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து!

ஒடிஷா மாநிலத்தில் ரூர்கேலா ரயில் நிலைய (Rourkela Railway Station) யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்,பரௌனி- கோவை வாராந்திர சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் ரூர்கேலா ரயில் நிலைய யார்டில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கோவை-பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 03358) அக்.4, 11 ஆகிய தேதிகளிலும், பரௌனி- கோவை வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 03357) அக்.7, 14 ஆகிய தேதிகளிலும் ரத்துச் செய்யப்படுகிறது.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.