ட்ரெண்டிங்

காந்தி ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது- சேலம் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வரும் அக்டோபர் 02- ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் உத்திரவின்படி, அக்டோபர் 02- ஆம் தேதி அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என்பதால், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் அக்டோபர் 02- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று முழுமையான அளவில் கடைகளை மூடி இறைச்சி கடை உரிமையாளர்கள் அரசு உத்தரவினை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.