ட்ரெண்டிங்

கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

 

கோவை- சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை- சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் வரும் பிப்ரவரி 27- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.