ட்ரெண்டிங்

சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் கடந்த 2017- ஆம் ஆண்டு அழகாபுரம் ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இது தொடர்பான சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சரவணனை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஜெயந்தி, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.  

 

இதையடுத்து, சரவணன் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி, சிறையில் அடைக்கப்பட்டார்.