ட்ரெண்டிங்

வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி! 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் வாக்களிப்பதை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் சார்பில் இருசக்கர விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. 

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணியானது வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.