ட்ரெண்டிங்

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழு விண்ணப்பிக்கலாம்- சேலம் மாவட்ட ஆட்சிஅயர் அறி

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெண்கள் வாழ்வாதாரம் மேம்படும்; அதேபோல் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நிலையும் உருவாக்கப்படும். எனவே, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறுதானிய உணவகம் அமைப்பதற்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுத் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்வுச் செய்யப்படும் குழுவிற்கு உணவகம் வழங்க 11 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சிறுதானிய உணவகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.