ட்ரெண்டிங்

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்ற பாத்திமா பள்ளி மாணவிகள்!

சேலத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 46 பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஓமலூரில் உள்ள பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலை மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.