ட்ரெண்டிங்

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி அடித்துக் கொலை!

திருடிய பொருட்களைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியைக் கட்டையால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் டைல்ஸ் வேலையைச் செய்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நெல்லையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக, பிரபு என்பவருடன் சென்றுள்ளார்.

 

வேலைப் பார்த்த வீட்டில் இருந்து தங்கம் மோதிரம் மற்றும் இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகளை இருவரும் திருடியுள்ளனர். இந்த நிலையில், சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது, திருடிய பொருட்களைப் பிரிப்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது, பிரபு கட்டையால் தாக்கியதில் கிருஷ்ணமூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.