ட்ரெண்டிங்

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி! 

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக, நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. 

இந்த சூழலில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம், எடப்பாடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

அத்துடன், பொதுமக்களுக்கு நுங்கு, நீர் மோர், தர்ப்பூசணி, சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.