ட்ரெண்டிங்

வைப்பீடு பத்திரங்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்!

பெண் குழந்தைகளுக்கான வைப்பீடு பத்திரங்கள் பெற்றோரிடம் வழங்கப்பட்டது! 

 

முன்னாள் தமிழக முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (செப்.12) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் பெண் குழந்தைகளுக்கான வைப்பீடு பத்திரங்களை, அவர்களது பெற்றோருக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார். 

 

இந்த முகாமில், சேலம் மாவட்ட சமூகநல அலுவலர் அருள்மொழி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இந்த வைப்பீடு பத்திரங்களை சம்மந்தப்பட்ட குழந்தைகள் 18 வயதைப் பூர்த்தி அடைந்துவிட்டால், அந்த பத்திரங்கள் முதிர்ச்சி அடையும்; அதைத் தொடர்ந்து, அந்த பணத்தை அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது