ட்ரெண்டிங்

மத்திய சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்த வாசகர் வட்டம்!

சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக வாசகர் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

சிறைச்சாலைகளில் சிறைவாசிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., அறிவுறுத்தியிருந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 சிறைவாசிகள் வாசகர் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாரம் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் நூலகத்தில் நடத்தப்படுகிறது. இவர்கள் மூலம் மற்ற சிறைவாசிகளுக்கும் வாசிப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.