ட்ரெண்டிங்

தற்கொலைச் செய்துக் கொண்ட நீதிமன்ற ஊழியர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுதந்திரராஜ் (வயது 50). இவர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். அஸ்தம்பட்டியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 07- ஆம் தேதி நீதிமன்றத்தில் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்து வரும் ஒருவர் சுதந்திரராஜுக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. 

இதையடுத்து, சுதந்திரராஜின் வீட்டிற்கு அவர் சென்று பார்த்த நிலையில், பிணமாகக் கிடந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சுதந்திரராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், சுதந்திரராஜ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார்? தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.