ட்ரெண்டிங்

செப்.12- ல் குடிநீர் விநியோகம் இருக்காது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 12- ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதிகளில் தமிழ்நாடு மின்வாரியத்தால் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 12- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.