ட்ரெண்டிங்

மக்களுக்கு கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்! 

கண்தான இருவார விழிப்புணர்வு ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல் செப்டம்பர் 08- ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இன்று (செப்.08) காலை 10.00 மணிக்கு ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மனித சங்கிலி கண்தான விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கண்தானம் தொடர்பாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மக்களுக்கு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த நிகழ்ச்சியை ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் சாம்ராஜ் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்ச்சியில், ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விமலாதித்தன் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனையின் கண் அறுவைச் சிகிச்சை நிபுணர் சந்தனா மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனையின் பொது மேலாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் கண்தானம் பற்றி சிறப்புரையாற்றினர்.