ட்ரெண்டிங்

சேலத்து கிருஷ்ணர்கள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை ஈர்த்த குழந்தைகள்!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஜஸ்ட் நவ் சேலம் சார்பில் மூன்றாம் ஆண்டாக சேலத்து கிருஷ்ணர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் உள்ள ஏ.ஜே. பார்ட்டி ஹாலில் (செப்.06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 170 பேர் முன்பதிவுச் செய்திருந்த நிலையில், சுமார் 120 குழந்தைகள், கிருஷ்ணர், ராதை மேடமணிந்து கலந்து கொண்டனர். குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். 

பாடல்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், அதற்கேற்றவாறு குழந்தைகள் நிகழ்ச்சியில் நடந்து வந்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ ஆகிய மதங்களைச் சேர்ந்த குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்ற நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றியது. 

குழந்தைகளின் நடனம், உடை ஆகியவற்றைக் கொண்டு, மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு, ஆறு குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், ரேஷ்மா ரியாஸ் ஆகியோர் வழங்கினர்.உடன் சிம்மர் சக்தி,அழகுக்கலை நிபுணர் பர்ஹானா,
பாரதி ராம்குமார், ஹேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 தொடர்ந்து பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக நடத்திய உதவியாளர் விளம்பரதாரர்களான ஸ்டெப் அப், எம்கேஆர் ஜுவல்லரி, பேபி கார்னர்ஸ், சிம்மர் உள்ளிட்டோருக்கு 'ஜஸ்ட் ந சேலம்' சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'ஜஸ்ட் நவ் சேலம்' நிறுவனத்தின் இயக்குநர் இம்தியாஸ் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை vj ராம்குமார் மற்றும் vj ஷரீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்