ட்ரெண்டிங்

இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஓமலூர் மின் செயற்பொறியாளர் சங்கரசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்கு இன்று (செப்.07) மின் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால், அந்த மின் தடை அறிவிப்பு ரத்துச் செய்யப்பட்டு, வழக்கம் போல் இன்று மின் விநியோகம் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.