ட்ரெண்டிங்

சேலத்தில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்! 

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை 05.00 மணியுடன் நிறைவுப் பெறுகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் சேலத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.