ட்ரெண்டிங்

ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி ஆராதனை விழா!

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மிருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திரா சேவா டிரஸ்ட் சார்பில், ஸ்ரீராகவேந்திரா ஸ்வாமிகளின் 352-வது ஆராதனை விழா நேற்று (ஆகஸ்ட் 31) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, நேற்று (ஆகஸ்ட் 31)  காலை நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், ஹோமம், கனகாபிஷேகம், துர்கா பூஜை, ஹயக்ரீவர் பூஜை, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஹயக்ரீவர் ஜெயந்தியையொட்டி, ஹோமத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புத்தகம், பேனா, நோட்டுகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

பெங்களூரு விதுஸ்ரீ பக்தி இன்னிசை, ஸ்ரீரங்கம் நிரஞ்சன் ஆச்சார் புல்லாங்குழல் இன்னிசை, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இன்றும் (செப்டம்பர் 01), நாளையும் (செப்டம்பர் 02) ஆராதனை விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி சுரேஷ் ராவ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.