ட்ரெண்டிங்

மதுபோதையில் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்- 4 பேர் கைது!

உணவகத்தின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகன்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி உணவகத்திற்கு மதுபோதையில் சாப்பிட வந்த இரண்டு பேர், பிரியாணியில் போதிய அளவு இறைச்சித் துண்டுகள் இல்லையெனக் கூறிக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் இருவரையும் ஊழியர்கள் சமாதானம் செய்து, உணவகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 10 பேருடன் திரும்பி வந்த இருவரும், உணவகத்தில் இருந்த ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட செந்தில்நாதன் மற்றும் அவரது மகன்கள் ஹரி விக்னேஷ், ரவிவர்மா மற்றும் விஷால் ஆகிய நான்கு பேரை கைது செய்த சூரமங்கலம் காவல்துறையினர், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.