ட்ரெண்டிங்

ரயில் மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியின் 8- வது வார்டில் உள்ள கொல்லத்தெருவில் வசித்து வருபவர் தங்கம் (வயது 58). கூலித்தொழிலாளியான இவர், கருப்பூரில் உள்ள கடைவீதிக்கு சென்று விட்டு, பொருட்களை வாங்கிக் கொண்டு, ரயில்வே கேட் வழியாக தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்த ரயில் தங்கம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தங்கம், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துக் கொள்ளும் நோக்கத்தில் ரயில்வே கேட் பகுதிக்கு தங்கம்சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

விபத்தில் உயிரிழந்த தங்கத்திற்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். தந்தையை இழந்த அந்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது.