ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெந்நாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்ச்சைகளுக்கும், ஊழலுக்கும் பெயர்போன பல்கலைக்கழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பணி நீட்டிப்பை வழங்கக் கூடாது என்றும், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்கம், பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தனர். 

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெந்நாதனின் பதவிக் காலத்தை வரும் 2025- ஆம் ஆண்டு மே 19- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற்கான ஆணையை துணைவேந்தர் ஆளுநரை நேரில் சந்தித்துப் பெற்றுக் கொண்டார். 

துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.