ட்ரெண்டிங்

விழிப்புணர்வு மாரத்தானில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் இளைஞர் திருவிழா 2023-24 முன்னிட்டு, சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., இன்று (ஆகஸ்ட் 29) காலை 07.00 மணிக்கு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற ஓட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்தின் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.