ட்ரெண்டிங்

பள்ளி மாணவியை கையைப் பிடித்து இழுத்த இளைஞர் கைது!

பள்ளி மாணவியை கையைப் பிடித்து இழுத்த இளைஞர் கைது! 

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பெரியார் நகர் காலனியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 23). இந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவுக் கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது வீட்டிற்கு உடனடியாகச் சென்று நடந்த சம்பவத்தை அழுதவாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர்,  கருணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 


அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கருணாமூர்த்தியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.