ட்ரெண்டிங்

ஓணம் பண்டிகை- சேலம் வழியாக கச்சிக்குடா- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவி

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கச்சிக்குடா- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று  தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென் மத்திய ரயில்வே (South Central Railway) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு கச்சிக்குடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 07044), மறுநாள் (ஆகஸ்ட் 29) காலை 11.38 மணிக்கு சேலத்தை வந்ததையும், பின்னர் காலை 11.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 11.20 கொல்லத்திற்கு சென்றடையும். 

மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 30- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 07045), மறுநாள் (செப்டம்பர் 01) அதிகாலை 05.07 மணிக்கு சேலத்தை வந்தடையும், பின்னர் அதிகாலை 05.10 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிக்குடாவைச் சென்றடையும். 

இந்த ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது". இவ்வாறு தென் மத்திய ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.