சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சேலம் மேற்கு மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,இன்று (நவ.05) நேரில் ஆய்வு பார்வையிட்டு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் 2026 அக்டோபர் மாதம் 28 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கணக்கெடுப்பு பணிகள் சேலம் மாவட்டத்தில் 04.11.2025 அன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாக்கவுண்டனூர் புத்தர் சாலையிலும் மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண்.15 மற்றும் வெள்ளாளப்பட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 3264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் 04.11.2025 அன்று முதல் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
மேலும்,தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியியல் கட்சியின் முகவர்கள் மூலம் அறிந்து கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை பெற வரும் தேதியினை முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தி அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெறுவதை உறுதி செய்திடவும் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக,மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,தெரிவித்தார்.

-pSVVi6AlWc.jpg )
