ட்ரெண்டிங்

மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன்கருதி இரண்டு பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் பாடம்) காலிப்பணியிடத்தினை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதிபெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு TET PAPER-II தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்துமூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் ஜூன் 28- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.109, சேலம்-636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.