ட்ரெண்டிங்

வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவர் கைது!

வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவர் கைது! 

சேலம் மாவட்டம், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 41). வட அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 37). இவர்கள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ரூபாய் 20,000 வரை முன்பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

எனினும், பணம் வழங்கிய பெண்களுக்கு வங்கிகளில் இருந்து எந்த கடன் உதவியும் வாங்கித் தரவில்லை. இந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் உடனடியாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், வெங்கடேஷ் மற்றும் சாவித்திரி ஆகியோர் வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் ரூபாய் 13 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, வெங்கடேஷ் மற்றும் சாவித்திரியை காவல்துறையினர், அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.