ட்ரெண்டிங்

கலை நிகழ்ச்சிகளுடன் 2024- ஆம் ஆண்டை வரவேற்ற மக்கள்!

 

சேலம் மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகளுடனும், இசை நிகழ்ச்சிகளுடனும் பொதுமக்கள் 2024- ஆம் ஆண்டை வரவேற்றனர்.

 

 

சேலம் மாநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆடி, பாடி புத்தாண்டை வரவேற்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். அதேபோல் சாலைகளில் சிறுவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

புத்தாண்டு கொண்டாட்டத்தால் சேலம் மாநகரமே களைகட்டியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சேலம் மாநகர பகுதி முழுவதும் 1,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதனிடையே, பேக்கரி கடைகளில் விற்பனைக்காக வித விதமான கேக்குகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு கேக் விற்பனை இல்லாததால் பேக்கரி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.