ட்ரெண்டிங்

போகி அன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைப்பு!

 

சேலம் மாவட்டத்தில் போகி பண்டிகை அன்று நடக்கவிருந்த முதல் திருப்புதல் தேர்வு வரும் ஜன.25- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஜன.06- ஆம் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இந்த அட்டவணையின் படி, வரும் ஜன.13- ஆம் தேதி போகி பண்டிகை அன்று தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போகி பண்டிகை அன்று நடக்கும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

 

இதையடுத்து, ஜன.13- ஆம் தேதி நடக்கவிருக்கும் 11-ம் வகுப்பிற்கான தமிழ், 12-ம் வகுப்பிற்கான ஆங்கிலம், மற்றும் 10-ம் வகுப்பிற்கான ஆங்கிலத் தேர்வுகள் வரும் ஜன.25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சேலம் சி.இ.ஓ. கபீர் அறிவித்துள்ளார். இதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சி.இ.ஓ. கபீர் உத்தரவிட்டுள்ளார்.