ட்ரெண்டிங்

பாரதி வித்யாலயா சங்க மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கே

பாரதி வித்யாலயா சங்க மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!

சேலம் மரவனேரியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயா சங்க மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விழா மலரினையும், புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர இயக்கத்தினையும் தொடங்கி வைத்தனர். 

இந்த விழாவில், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

1946- ஆம் ஆண்டு முதல் கல்விச் சேவையின் வழியாக சேலம் மாநகரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றும் இப்பள்ளி நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.