ட்ரெண்டிங்

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் பொறுப்பேற்பு!

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் பொறுப்பேற்பு!

சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையராக அருண் கபிலன் பணியாற்றி வந்த நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், நெத்திமேட்டில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 11) காலை 10.00 மணிக்கு வந்த அருண் கபிலன், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அருண் கபிலனுக்கு பூங்கொத்துக்குக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். 

கடந்த 2019- ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்த அருண் கபிலன், திண்டுக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், தி.நகரின் காவல் துணை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.