ட்ரெண்டிங்

ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து

சேலம் அருகே சுக்கம்பட்டியில் நேர்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பேருந்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் அருகே சுக்கம்பட்டி பகுதியில் கடந்த ஜூன் 12-ம் தேதி இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த வீராணம் காவல் நிலைய போலீசார் பேருந்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஓட்டுநர் ரமேஷின் ஓட்டுநர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.