ட்ரெண்டிங்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்.... இளைஞர் உயிரிழப்பு!

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்.... இளைஞர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாந்த். இவருக்கு வயது 22. இவர் வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இந்த இளைஞர் நேற்று (ஆகஸ்ட் 10) செவ்வாய்ப்பேட்டையில் இருந்து சேலம் கோட்டைப் பகுதிச் சென்றுள்ளார். அங்கு தனக்கு இருக்கும் வேலையை முடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் செவ்வாய்ப்பேட்டைக்கு வந்துக் கொண்டிருந்தார். 

செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே வந்த ஹரிபிரசாந்த், இரண்டு சிறுவர்கள் சாலையைக் கடந்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்த ஹரிபிரசாந்த், சிறுவர்களை மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சடன் பிரேக்கைப் போட்டுள்ளார். 

இதில் தடுமாறிய ஹரிபிரசாந்த், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள், அந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து குறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் விசாரணை நடத்தினர். பின்னர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இருசக்கர வாகனத்தை வேகமாக ஹரிபிரசாந்த் இயக்கியதே காரணம் என்று விபத்து நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.